திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கான பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஆரம்பமானது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
குறிப்பாக பெட்டிகள் அனுப்பும் போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எடுத்துச் செல்வதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக முப்படையினரது பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்படுவதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை சுகாதார தரப்பினர் தமது கடமைகளை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை