வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதாக கருதப்படும் 10 ஆயிரம் கிலோ அரிசி பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து பத்தாயிரம் கிலோ அரிசி பைகளை நேற்று (4) இரவு கண்டு பிடித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் அவசர தொலைபேசி அழைப்பிற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கந்தளாய், கெமுனு மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றினுள் பதுக்கி சைவக்கப்பட்டிருந்த பத்து கிலோ கிராம் நிறைவுடைய ஆயிரம் அரிசி பைகளை கைப்பற்றியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை