Thursday 25th of April 2024 07:43:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ். கொரோனா ஆய்வு கூடம்; இருவருக்கு தொற்று உறுதி!

யாழ். கொரோனா ஆய்வு கூடம்; இருவருக்கு தொற்று உறுதி!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடர்பிலான பரிசோதனையில் விடத்தல் பளையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கொரோனா தொடர்பில் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

08.08.2020. 6.30 pm. (சனிக்கிழமை )

இன்றைய பரிசோதனையில் தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளையை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 126பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் :

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 13 பேர்

* தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை - 27 பேர் (2 பேருக்கு தொற்று உறுதி )

*பொது வைத்தியசாலை மன்னார் - மூவர்

* பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்

* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, கரைச்சி, கிளிநொச்சி - 26பேர்

* வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 56பேர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE