தரம் 11 இல் கல்வி கற்றும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கல்வி பயின்ற பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் என 100 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இராஜாங்கனை பகுதியில் உள்ள யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்றும் 16 வயதுடைய மாணவனுக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி சந்தியா அபேரத்ன தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் கல்வி பயின்ற நவோத்யா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று உறுதியான மாணவனுடன் தொடர்புபட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 100 பேர் வரை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை