மட்டக்களப்பு, விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா இன்றையதினம் பாற்குட பவணியுடன் ஆரம்பமானது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, விளாவட்டவான் எனும் புண்ணிய பதியினிலே இலங்கையில் முதன் முதலில் ஆறு அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் மூல விக்ரகம் அமையப்பெற்ற தளம் எனும் மகிமைபெற்ற ஸ்ரீ விரமாகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா இன்று ஆரம்பமாகி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை திருப்பள்ளையம் மற்றும் தீ மிதிப்புடன் இனிதே நிறைவடைய இருக்கின்றது.
திருச்சடங்கு உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து காலை 10 மணிக்கு விசேட பூசைகளுடன் பாற்குட பவணி ஆரம்பமாகி பிரதான வீதியினூடாக சென்று வீரமாகாளியம்மன் ஆலயத்தை சென்றடைந்ததும் அம்பாளுக்கு பாலாபிசேகம் மற்றும் விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு