வடக்கு – கிழக்கில் நாளை நடைபெறும் முழுக்கடையடைப்புக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
எங்களுடைய அரசியல் எதிர்ப்பை காட்டுக்கிற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இப்போது பலவிதமான தடைகளை முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அவ்வாறான அரசாங்க அடக்குமுறைக்கு எதிராகத் தான் நாளைய ஹர்த்தால் (கதவடைப்பு) போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த போராட்டத்திற்கு வடக்கு - கிழக்கிலே இருக்கின்ற அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை