Friday 26th of April 2024 04:18:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொலிஸ் வாகனம் மோதியதில் மன்னாரில் சிறுமி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸ் வாகனம் மோதியதில் மன்னாரில் சிறுமி உட்பட்ட மூவர் படுகாயம்!


மன்னார் பாஸார் பகுதியில் இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன் அவருடைய மனைவி மற்றும்,அவர்களுடன் வருகை தந்த 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீதி போக்கு வரத்து பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் வாகனத்தினை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE