யாழ்ப்பாணம் வடமராட்ச்சி கிழக்கு மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில் கடந்த இரவு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் 21 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 21 பேரே மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் அருவி இணையத்துக்குத் தெரிவித்தார்.
இதேவேளை அவர்கள் கடந்த இரவே அங்கு அழைத்துவரப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மாவட்டங்கள் தோறும் ஒவ்வொரு கொரோனா விசேட வைத்தியசாலைகள் திறக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.மாவட்டத்திற்கான வைத்தியசாலை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையை மாற்றி அமைத்து நேற்றுக் காலையே திறக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்