குருநகர் பகுதியில் நேற்று இருவருக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மேலும் குறித்த நபர்களுடன் ஏற்கனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்கு நாளையதினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நேற்று குருநகர் பகுதியில் இருவர் தொற்றுக்குள்ளான நிலையில் சன அடர்த்தி கூடிய குருநகர் பகுதியினை முடக்க மத்திய சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டபோதிலும் அதற்கு தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்