Wednesday 1st of May 2024 04:47:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாவீரர் நாளையடுத்து தமிழர் தாயகத்தில் பாதுகாப்பு தீவிரம்: மூலை முடுக்கெல்லாம் படைகள் குவிப்பு!

மாவீரர் நாளையடுத்து தமிழர் தாயகத்தில் பாதுகாப்பு தீவிரம்: மூலை முடுக்கெல்லாம் படைகள் குவிப்பு!


மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வழமைக்கு மாறாகப் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மூலைமுடுக்கெல்லாம் அரச படைகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் நாளை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொதுவெளியில் நடத்த அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் இந்தக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வடக்கு, கிழக்கில் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே இருந்த இராணுவச் சோதனைச் சாவடிகளை விட விசேடமாக பொலிஸ் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அரச படைகளின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ் அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

மாவீரர்களைப் பொதுவெளியில் நினைவுகூரத் தடை விதித்தாலும் தமிழ் மக்கள் தத்தமது வீடுகளில் நாளை மாலை 6.07 மணியளவில் ஈகைச்சுடர்களை ஏற்றி வீரமறவர்களை அஞ்சலிப்பார்கள் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE