Friday 26th of April 2024 12:10:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். ஆய்வுகூட பரிசோதனை: மூவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

யாழ். ஆய்வுகூட பரிசோதனை: மூவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இன்று மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை முடிவுகள் குறித்து யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிடும் செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

இன்று (டிச-01) யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 426 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 3 பேருக்கு தொற்டறுறுதியானதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE