Friday 26th of April 2024 01:01:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை நகர்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறிய வியாபார நடவடிக்கை அகற்றப்பட்டது!

பருத்தித்துறை நகர்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறிய வியாபார நடவடிக்கை அகற்றப்பட்டது!


பருத்தித்துறை நகர்ப்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி மீன்வியாபாரத்தில் ஈடுபட்ட மீன்வியாபாரிகளை பருத்தித்துறை பொதுசுகாதாரபரிசோதகர்கள் அவ்விடத்தைவிட்டு உடனடியாக அப்புறப்படுத்தினர்.

கொரோனா பரவல் சந்தைகளூடாக யாழ்ப்பாணத்தில் ஊடுருவியுள்ளநிலையில் மாகாண சுகாதார சேவகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைய வடமாகாணத்தில் அனைத்துபொது சந்தைகளும் மூடப்பட்டன.

வியாபாரிகளை சமூக இடைவெளியுடன் கொறோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சந்தை மற்றும் அதன் வீதியோரம் தவிர்ந்த பகுதிகளில் மரக்கறி மற்றும் மீன் வியாபாரம் செய்ய பருத்தித்துறை நகரசபை அறிவுறுத்தியிருந்தது.

இதுகுறித்து ஒலிபெருக்கியூடாகவும் தொடர்ந்து அறிவுறுத்தியும் அதனைப்புறக்கணித்து சந்தை அருகேயுள்ள சந்தை வீதியில் அதிகளவான மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் நெருக்கமாக ஒன்றுகூடியதால் சன நெரிசல் ஏற்பட்டு கொறோனா பரவலுக்கு ஏதுவான நிலமை தோன்றியது.

இதனையடுத்து பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் க.சுதாகரன் மற்றும் ஆ.ஜென்சன் றொனால்ட் ஆகியோர் பருத்தித்துறை நகரசபை ஊழியர்கள்சகிதம் சென்று விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைத்து வியாபாரிகளையும் எச்சரித்து அப்புறப்டுத்தியதோடு அவ்வீதிளையும் வியாபார நடவடிக்கைகளுக்காக நகரசபைஊழியர்களின் உதவியோட தடைசெய்தனர்.

மேலும் பருத்தித்துறை நகர்ப்பகுதியில் கொரோனாகட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சில வர்த்தக நிலயங்கள் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட பரிசோதனையைத் தொடந்து இரு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE