மட்டக்களப்பு மைலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்களவர்களால் கால்நகைள் காயப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பூர்வீகமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்த மேய்ச்சல் தரை பகுதியான மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைக்காகவென அரச ஆதரவுடன் அத்துமீறியுள்ள குடியேற்றவாசிகளால் தமிழ் மக்களின் கால்நடைகளை வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் இச் செயற்பாடு நேற்றைய தினம் (டிச-24) உச்சம் பெற்று தமிழ் மாக்களின் கால்நடைகள் பலவற்றை அடித்து காயப்படுத்தியுள்ளதுடன் பல கால்நடைகளை கொன்று இறைச்சிக்காக எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.
காயப்படுத்தப்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே காணப்படுகின்றதுடன்இ இறைச்சிக்காக வெட்டப்பட்ட கால்நடைகளின் எச்சங்கள் அப்பகுதியெங்கும் சிதறிக் காணப்படுகின்றது.
அத்துமீறிய சிங்கள குடியேற்றவாசிகளின் இவ் அட்டுழியத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு