மருத்துவ மாதுக்கள் இருவர் உள்ளிட்ட மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் மருத்துவ மாதுக்கள் இருவர் மற்றும் சாரதி என மூவருக்கு இன்று (சனிக்கிழமை) காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அம்பாறை - கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் மேலம் தெரிவிக்கையில்,
கொரோனா பரிசோதனை மீண்டும் செய்யும் வரை, பணிமனையின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை