கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழக்கும் முஸ்லிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
மன்னாரில் மறிச்சுக்கட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏரகம ஆகிய இடங்களில் நிலத்தடி நீா் மட்டம் 30 அடிக்குக் கீழே உள்ளது. இந்நிலையில் இந்த இடங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க ஏற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது அவர்களின் உடலில் இருக்கும் கொரோனா வைரஸ் நிலத்தடி நீருடன் கலந்து பரவலாம் என இலங்கை அரசு தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, நிலத்தடி நீர் மிக ஆழமாக உள்ள பொருத்தமான இடங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீா் வழங்கல் அமைச்சா் வாசுதேவவிடம் கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து அமைச்சின் புவியியலாளர்கள் ஆய்வு செய்து நிலத்தடி நீடி மிகவும் ஆழமாகக் காணப்படும் இரு இடங்களை அடையாளம் கண்டு அறிக்கையளித்துள்ளனர்.
இந்த அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கிழக்கு மாகாணம், வட மாகாணம்