Thursday 2nd of May 2024 02:50:18 PM GMT

LANGUAGE - TAMIL
.
கர்ப்பிணி பெண், பல்கலை மாணவனுக்கு தொற்றுறுதி: வவுனியா பட்டானிச்சூர் முடக்கப்படுகிறது?

கர்ப்பிணி பெண், பல்கலை மாணவனுக்கு தொற்றுறுதி: வவுனியா பட்டானிச்சூர் முடக்கப்படுகிறது?


வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பட்டனிச்சூர் முடக்கப்படலாம் என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் பட்டானிச்சூர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவனுக்கும் n காரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். கொரோனா ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மாணவனுக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE