கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் 2021ம் ஆண்டு முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக கிழக்கு மாகாணத்தில் 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பின் அடிப்படையில்,
கிழக்க மாகாணத்திற்குட்பட்ட
காத்தான்குடியில் - 25 பாடசாலைகள்
கல்முனையில் - 05 பாடசலைகள்
திருக்கோவில்யில் - 01 பாடசாலை
அம்பாறையில் - 01 பாடசாலை
என 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம்