இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்தும் நீர்வெளியேறி வருவதால் கண்டாவளை பிரசேத்தில் பல பகுதிகளில் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்தும் குளத்தின் நீர்மட்டம் 36 அடியைக் கடந்து காணப்பட்டுவருவதால் நீரை வெளியேற்றும் நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.
தற்போது நீர்வெளியேறும் அளவில் நீரை தொடர்ந்து வெளியேற்றுவதானால் 36 அடியை நீர்மட்டம் நெருங்குவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் செல்லும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
அதிலும் கூடுதலாக நீரை வெளியேற்றினால் மக்கள் இன்னமும் கூடுதலான பாதிப்பைச் சந்திக்கவேண்டி ஏற்படலாம் என்பதன் காரணமாகவே நீர்வெளியேற்றும் அளவை மட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு அருவிக்குத் தெரிவித்தது.
இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டுள்ளமையால் குளத்தில் 39 அடிவரையில் நீரை சேமிக்கமுடியும் என்றும் அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை கண்டாவளை பிரதேசத்தில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் பெருமளவான மக்கள் வேறு பகுதிகளுக்கு நகரவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை மக்களின் பாதிப்புக்கள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை அவதானிக்கமுடிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி