மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்யும் வகையில் எரிபொருள் நிலையம் ஒன்று வெல்லாவெளியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு அருகில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யுத்ததிற்கு பின்னர் இப்பகுதியில் எரிபொருள் நிலையம் ஒன்றின் தேவை தொடர்பில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது எரிபொருள் நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி ,வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த ஸ்ரீ போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் இ. புவனேந்திரன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் பா.சதிஸ்கரன்,கிழக்கு மாகாண இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் எஸ் .நிமால்சங்கர், போரதீவுப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் நா.தர்மலிங்கம்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியலாளர். நா.சசிநந்தன் உடப்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள் விவசாய அமைப்புகள்,வாகன உரிமையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் போரதீவுப்பற்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள்,வாகன உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் நன்மையடையவுள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு