Friday 26th of April 2024 05:24:42 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடமராட்சி: பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா!

வடமராட்சி: பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா!


வடமராட்சி பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து திரும்பிய அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE