Friday 26th of April 2024 12:40:59 PM GMT

LANGUAGE - TAMIL
.
வன்னியில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!

வன்னியில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!


வன்னி பிராந்தியத்தில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வடக்குமாகாண கலாசார உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்திற்கு வன்னியிலிருந்து நாலு பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்குமாகாண கலாசார உத்தியோகத்தர்களின் விசேட தரத்திற்கு வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2020.12.21 ஆம் திகதி நடாத்தப்பட்ட வடக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் நேர்முகத்தேர்விற்கமைய 2013.01.01 ஆம் திகதிமுதல் வலுப்பெறும் வண்ணம் கீழ்வரும் உத்தியோகத்தர்கள் பதவி உயர்விற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாமாவட்டத்தி்ல் மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமைபுரியும் மாலினி கிருஸ்ணானந்தன், முல்லைத்தீவுமாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமைபுரியும் இராமநாதன் மதியரசியும்,

கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமைபுரியும் சுகுணாளினி விஜயரத்தினம், நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரான இராஜதுரை திருலிங்கநாதன் ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE