Friday 26th of April 2024 05:35:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது; தாழ்நில பகுதி மக்கள் அவதானம்!

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது; தாழ்நில பகுதி மக்கள் அவதானம்!


கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசனதிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல சேவைகள் திணைக்களமும், இராணுவத்தினரும், பொதுமக்களும் பணியில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமும், நீர் பாசனத் திணைக்களமும் குளத்தை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளார் த.ராஜகோபு தலைமையில் நீர் கசிவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் குறித்த நீர் வெளியேற்றத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் போது சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வலது கரை துருசும் திறந்து விடப்பட்டது. எனினும் நீர் தேக்கத்தின் நீரின் அழுத்தம் காரணமாக நீர் கசிவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு மத்தியில் குளத்தின் வால் கட்டுப் பகுதி வெட்டி விடப்பட்டது.

நீர் வடிந்தோடுவதால் தாழ் நில பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமது பாதிப்பு தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE