Thursday 25th of April 2024 11:40:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளி. பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவனுக்கு கொரோனா!

கிளி. பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவனுக்கு கொரோனா!


யாழ். ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் 7 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து அறிவியல் நகர் திரும்பியிருந்தார் என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.சரவணபவன் தெரிவித்தார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவனைக் கிளிநொச்சியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மேலும் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE