காட்டு யானைகளின் தாக்குதலில் இருவேறு சம்பவங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மியான்கல் வயல்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவர் பலியானார்.
வயலில் அமைக்கப்பட்டுள்ள பரணில் நேற்றைய தினம் காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தபோது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அவர் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈரலகுளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் மரணித்ததாக கரனடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பழைய சந்தை வீதி, சித்தாண்டி 4 கிராமத்தை சேர்ந்த 34 வயதான ஒருவரே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது வயல் காணியில் வைத்து அவர் இன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கரனடியனாறு காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு