Friday 26th of April 2024 10:22:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
டெங்கு நோய்த் தொற்றினால் திருமலையில் 07 வயதுச் சிறுமி பலி!

டெங்கு நோய்த் தொற்றினால் திருமலையில் 07 வயதுச் சிறுமி பலி!


டெங்குநோய்த் தொற்றுக்கு உள்ளான சிறுமி ஒருவர் திருகோணமலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயதுச் சிறுமி ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளான நிலையில் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இருந்தபோதிலும் அவருடைய உடல் நிலை மோசமடைந்துவந்தமையால் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இருந்தபோதிலும் அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம் பெற்றுவருகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

கடந்த காலங்களில் டெங்குநோயைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் கடந்தகாலங்களில் தீவிரமாக செயற்பட்டுவந்தமையாலேயே டெங்கு நுளம்பும் பெருக்கம் பெருமளவில் தடுக்கப்பட்டுவந்திருந்தது.

கொரோனாத் தொற்று தீவிரம் பெற்றுள்ளமையால் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் கிராம ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE