இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்துள்ளது.
இலங்கையில் கொரோனாத் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மேலும் 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் (பெப்-23) சிறைச்சாலை கொத்தணியில் 15 பேர் உள்ளிட்ட மேலும் 492 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மொத்த தொற்று 81 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் மேலும் 732 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 75 ஆயிரித்து 842 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை