Thursday 25th of April 2024 11:00:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
புத்தாண்டு வியாபார நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பேணாவிடில் கடும் நடவடிக்கை! - தி.சரவணபவன்!

புத்தாண்டு வியாபார நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பேணாவிடில் கடும் நடவடிக்கை! - தி.சரவணபவன்!


புத்தாண்டு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சுகாதா நடைமுறைகளைப் பேணாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சந்தையினை புனரமைத்து அதனை வியாபாரிகளிடம் கையளிக்கம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கிவரும் நிலையில் மட்டக்களப்பு பொதுச்சந்தை புனரமைக்கப்பட்டு அவற்றினை மீண்டும் வியாபார நடவடிக்கைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வெளியிடங்களில் இருந்துவந்து வீதியோர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரினால் பொதுச்சந்தை வியாபாரம் மற்றும் ஏனைய பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு பாரியளவில் தொழில் நஸ்டம் ஏற்படுவதாகவும் இதனை நிவர்த்திசெய்ய மாநகர முதல்வர் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.

அத்துடன் பொதுச்சந்தையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளும் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகர முதல்வர் இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம் மாநகரசபையில் உள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக மக்களின் தேவையினை உரிய நேரத்தில் பூர்த்திசெய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகரசபையின் தீர்மானத்திற்கு அமைவாக தரித்துவைக்கப்பட்டிருந்த ஜிகே அறக்கட்டளை அமரர் ஊர்தி சேவை வாகனத்தினை நகராத வகையில் கற்கள் போட்டு மறிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பெயர் வெள்ளை நிறத்தினால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் இது மாநகரசபையில் உள்ள சிலர் அடாவடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி முதல்வர் குற்றஞ்சாட்டினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE