Wednesday 8th of May 2024 08:24:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
மின்னல் தாக்கி மட்டக்களப்பிலும் விவசாயி ஒருவர் மரணம்!

மின்னல் தாக்கி மட்டக்களப்பிலும் விவசாயி ஒருவர் மரணம்!


மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலையர்கட்டு கிராமத்தில் வியாழக்கிழமை (15) மாலை மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது விசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது அப்பகுதியில் சிறுபோக வயல் விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் வயிலில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மாலையர்கட்டு கிராமத்தைச்சேர்ந்த நல்லதம்பி மோகனசுந்தரம் எனும்விவசாயி உயிரிழந்துள்ளதார்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்ததை எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு பகுதியிலும் மின்னல் தாக்கி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE