Wednesday 1st of May 2024 05:12:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் மற்றொரு கொரோனா மரணம்!

யாழில் மற்றொரு கொரோனா மரணம்!


கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு முதியவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் நேற்று மாலை இடம்பெற்றதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, வீரபத்திரர் ஆலயத்திற்கு அண்மையில் வசிக்கும் 77 வயதுடைய K.இராசலிங்கம் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 03ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 05ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை இதயப் பாதிப்பு தொடர்பிலான சிகிச்சைகளும் வழங்கப்பட்டுவந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE