Sunday 5th of May 2024 07:35:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
முள்ளிவாய்க்காலில் நாட்டுவதற்கு நினைவுக்கல் கொண்டுவரப்பட்டது! பொதுக்கட்டமைப்பினரும் படைத்தரப்பும் தர்க்கம்! (படங்கள்)

முள்ளிவாய்க்காலில் நாட்டுவதற்கு நினைவுக்கல் கொண்டுவரப்பட்டது! பொதுக்கட்டமைப்பினரும் படைத்தரப்பும் தர்க்கம்! (படங்கள்)


முள்ளிவாய்க்கால் நினைவேந்த வளாகத்தில் நாட்டுவதற்காக நினைவுக் கல் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினரால் அங்கு கொண்டுவரப்பட்ட நிலையில் படைத்தரப்பினருக்கும் அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆறு அடி உயரமான குறித்த நினைவுக் கல் பார ஊர்தி ஒன்றில் அந்தப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற படைத்தரப்பினர் கல்லினை அங்கு இறக்கவேண்டாம் என்று தடுத்திருக்கின்றனர்.

இருந்தபோதிலும் அங்கு நின்றிருந்த அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினர் அந்தக் கல்லினை அந்தப் பகுதியில் இறக்கியிருக்கின்றனர்.

அதனை அங்கு நிறுவவுதற்கான சீமெந்து, மண் போன்ற பொருட்களும் கொண்டு வரப்பட்டிருப்பதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கல்லினை நாட்டுக்கின்ற பணி நாளை அல்லது மறு நாள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அருட்தந்தையர்கள் ஆறு பேரும் அங்கிருந்து சென்றிருப்பதாகவும் படைத்தரப்பினர் தற்போது வரையிலும் அங்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE