வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் பங்கேற்க வெளிப் பக்தர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எந்த ஒரு வெளிப் பக்தர்களும் அனுமதிக்கப்படாமல் கிரிகைகள் நடைபெறுகின்ற ஒரு சிறிய நிகழ்வாகவே நடைபெறும் என்றும் தேவையற்ற வகையில் கூடுவதைத் தவிர்க்குமாறும் சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்