Wednesday 8th of May 2024 06:47:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
அம்பாறை, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!

அம்பாறை, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!


அம்பாறை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் இன்று அதிகாலையுடன் விடுவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று (ஜூலை-27) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய,

களுத்துறை மாவட்டத்தில்

அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்குலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புர பகுதி

அம்பாறை மாவட்டத்தில்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் இல-13 கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டத்தில்

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்போவில தெற்கு கிராம சேவகர் பிரிவின் கரதியான தோட்டம்

ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE