யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியில் ஒரு பகுதி இன்று அதிகாலை முதல் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரவெட்டி தெற்கில் ஆலய திருவிழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த 49 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே கரவெட்டி தெற்கில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியான மத்தொனி கிராம சேவகர் பிரிவு (J/366) சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கியவர் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி