Thursday 25th of April 2024 09:23:41 PM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
இந்திய வீரர்கள் எண்மரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

இந்திய வீரர்கள் எண்மரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!


கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணல் பாண்டயாவுடன் தொடர்பில் இருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்கள் எண்மரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான ரீ-20 தொடரில் பங்கேற்றுள்ள க்ருணல் பாண்ட்யாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்து இந்திய வீரர்கள் எண்மர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று நடைபெற்றிருக்க வேண்டிய இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய அணி வீரர்கள் எண்மருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் எந்த வீரருக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட 2வது ரீ-20 போட்டி இன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் குறித்த போட்டி இன்று பி.பகல் நடைபெறவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE