கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணல் பாண்டயாவுடன் தொடர்பில் இருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்கள் எண்மரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.
இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான ரீ-20 தொடரில் பங்கேற்றுள்ள க்ருணல் பாண்ட்யாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்து இந்திய வீரர்கள் எண்மர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்று நடைபெற்றிருக்க வேண்டிய இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய அணி வீரர்கள் எண்மருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் எந்த வீரருக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட 2வது ரீ-20 போட்டி இன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் குறித்த போட்டி இன்று பி.பகல் நடைபெறவுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை