வடபிராந்திய தேவசபைகள் சங்கத்தினால் தொடர்பாடல் உபகரணங்கள் வைத்தியசாலைக்கு இன்று கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதியின் தொடர்பாடல் இலகுபடுத்தவிற்காக வடபிராந்திய தேவசபைகள் சங்கத்தினால் இன்றைய தினம் நிதி கையளிக்கப்பட்டது.
சிகிச்சை பெறும் நோயாளர்கள், ஊழியர்களின் தொடர்பாடல் வசதிக்காகவும், தொற்று அபாயத்தை குறைக்கும் வகையிலும் இத்தொடர்பாடல் சாதனம் உதவியாக அமையவுள்ளது.
இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அதற்கான நிதி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி