யாழ்.மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் கிளிநொச்சியில் உயிரிழந்த இருவர், யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த 02 என நான்கு பேர் உள்ளடங்குவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 27 பேர்யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர்,
யாழ்.சிறைச்சாலையில் 08 பேர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 08 பேர்,
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா மாவட்டத்தில் 09 பேர்
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்