Friday 26th of April 2024 04:04:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை  இடை நிறுத்தக் கோரி மனுத் தாக்கல்!

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடை நிறுத்தக் கோரி மனுத் தாக்கல்!


வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடை நிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப் கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE