Thursday 25th of April 2024 09:56:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
காரைநகர் MOH பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவர் உட்பட 11 பேருக்கு கொரோனா!

காரைநகர் MOH பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவர் உட்பட 11 பேருக்கு கொரோனா!


யாழ். காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவர் உட்பட 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-13) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 18 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாய் (வயது-37) மற்றும் பெண் குழந்தை (வயது-05), ஆண் குழந்தை (வயது-09) என மூவருக்கும்,

தந்தை (வயது-37) மற்றும் ஆண் குழந்தை (வயது-6), பெண் குழந்தை (வயது-8) என மூவருக்கும்,

தந்தை (வயது-51), தாய் (வயது-52), 19, 29 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவர் என நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவருடன் 10 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE