இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த 32 வயதுடைய தனது கணவனின் உயிரைக் காக்க கொடையாளர்களை உதவுமாறு இளம் குடும்ஸ்பதரின் மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி புதுமுறிப்பு பாடசாலை முன் வீதியைச் சேர்ந்த செபஸ்தியான்பிள்ளை தேவராசா என்பவரின் மனைவியே கோரிக்கை விடுத்துள்ளார்.
1 1/2 வயதை பூர்த்தியாகியுள்ள தனது பிள்ளைக்காகவேனும் உயிர் காக்க உதவுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கணவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சத்திரசிகிச்சை செய்வதற்கு 45 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் முடிந்தவர்கள் உதவி புரிந்து கணவன் உயிரைக் காப்பாற்றி தமது குடும்பத்திற்கு உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் வங்கி கணக்கு இலக்கம் 048200390018363
தொலை தொலைபேசி இலக்கம் 0765335356 / 0774293115
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி