Friday 26th of April 2024 04:29:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில்   பூஸ்டர்  தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னாரில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!


மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்தவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி .வினோதன் தலைமையில் இராணுவத்தினரின் நெறிப்படுத்தலில் இன்று (10) வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டொஸ்களை பெற்றவர்களுக்கும் அதே நேரம் தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளே மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக மன்னார் பேருந்து நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் இராணுவத்தினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE