மகா சிவராத்திரி விரத நிகழ்வுகள் இன்று இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக ராஜ கோபுரத்தை உடைய மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் காலை முதல் ஆரம்பமாகியது.
ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதி கரையில் கண்டெடுக்கப்பட்ட உயிர் சிவலிங்கத்திற்கு அடியார்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் பண்ணும் நிகழ்வு ஆரம்பமாகியது.
ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு புஷ்கரணியில் தீர்த்த நீரை எடுத்து வந்து அபிஷோகம் பண்ணுதலுடன் ஆரம்பமாகிய இவ் அபிஷோக நிகழ்வானது இன்று காலை முதல் இன்று பின் இரவு வரை இடம்பெறவுள்ளது.
இதன் போது தங்களது ராசிகளுக்கு உரிய அபிஷேக திரவியங்களால் அடியார்கள் அபிஷேகம் செய்வதுன் மேலும் இன்று லிங்கோற்பவ காலத்தில் ஏகாதச ருத்ர வேள்வியும் நடைபெற்றுவருகின்றது.
இன்று இரவு முழுவதும் நான்கு ஜாம பூஜை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம் பெறும் என ஆலய பரிபாலன சபைத் தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு