Wednesday 8th of May 2024 09:13:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி; வாழைச்சேனையில் விழிப்புணர்வு பேரணி!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி; வாழைச்சேனையில் விழிப்புணர்வு பேரணி!


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கோறளைப்பற்று வாழைச்சேனை மகளீர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியில் இன்று சனிக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற பேரணியானது வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக ஆரம்பமாகி வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினர், முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் வன்கொடுமை மற்றும் சட்டவிரோத மதுபாவனையை பயன்பாடு போன்றவற்றை ஒழிக்கும் முகமாக விழிப்புணர்வு கோசங்களுடன் பேரணி இடம்பெற்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE