கிளிநொச்சி கனகபுரத்தில் அரசாங்க உத்தரவை மீறி சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெற்ற விருந்தினர் விடுதிக்கு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கனகபுரத்தில் அமைந்துள்ள மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர்விடுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சற்று முன்னர் பொலிஸாரால் குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டது.
சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸார் குறித்த விடுதியை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
விருந்தினர் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்றபோது அங்கு மூவர் நின்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி