இலங்கை கிழக்கு மாகாணத்தில் இன்று மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் 5 பேருக்கும், தம்பிலுவில் பகுதியில் 4 பேருக்கும், இறக்காமம் பகுதியில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மத்தி பகுதியில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு