திருகோணமலையில் கொரோனாத் தொற்று சடுதியான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த ஆறு நாட்களில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 66 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அத்தியவசிய தேவை தவிர ஏனைய தேவை கருதி பிற மாவட்டங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருபவர்கள் தமது பயணங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்ற விசேட கோவிட் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தற்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதுடன் ஒன்று கூடல் உட்பட அநாவசிய பயணங்களில் இருந்து தவிர்ந்து வைரசை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை