Thursday 25th of April 2024 09:50:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வியே!

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வியே!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னான் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கை கைவிடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்திருப்பது, நீதியின் தோல்வி என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தலைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் வழக்குடன் தொடர்புடைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தான் எம்.பி. (பிள்ளையான்) உட்பட நால்வரையும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலக இயக்குநர் டேவிட் கிறிப்த், இதனை நீதியின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளர்.

அத்துடன் போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கின் விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்த ஆர்வம் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலக இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார் .

பொறுப்புக்கூறப்படுதல் இல்லாமல் இலங்கையால் தனது வரலாற்றின் இருண்ட பக்கங்களைக் கடந்து போக முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஜோசப் பரராஜசிங்கம் கொலை குறித்து அதிகாரிகள் புதிய விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலக இயக்குநர் டேவிட் கிறிப்த் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE