மட்டக்கப்பில் பாடசாலை மாணவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வகுப்பு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ள குறித்த சம்பவத்தில் 10 ஆம் வகுப்பில் கல்விகற்கும் மாணவனுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மேற்படி மாணவன் கல்வி பயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த மேலும் 08 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு