Tuesday 7th of May 2024 11:46:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை; எண்மருக்கு கொரோனா!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை; எண்மருக்கு கொரோனா!


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று 295 பேருக்கு குறித்த பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களில் எண்மர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களில் இருவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட, நுண்கலைத் துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE