யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாழ். சிறைச்சாலை கைதிகள் ஆறு பேர் உள்ளிட்ட ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் தொடர்பான நாளாந்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இன்றைய தினம் (பெப்-26) 430 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டம் - 06 (யாழ்ப்பாணம் சிறைச்சாலை)
மக்கார் மாவட்டம் - 01
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்