யாழ் கொரோனா ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் மாவட்டத்தில் 11 பேர் உள்ளிட்ட வடமாகாணத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்றைய தினம் 760 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாநு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடமாகாணத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் யாழ் மாவட்டத்தில் 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 02 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தொற்றாளர்கள் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில்....
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்